"இதெல்லாம் சுஜிபி"... ஒரே வார்த்தையில் ஓபிஎஸ் இமேஜை மொத்தமாக காலி செய்த செல்லூர் ராஜூ

x

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ மீது அவதுாறு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக செல்லூர் ராஜூ இன்று நேரில் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த வழக்கை எதிர்கொள்ள தயார் என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்