பட்டப்பகலில் கைவரிசை - பையை வைத்து திருடிய பலே கில்லாடி

x

கடைக்கு வந்தவரின் கவனத்தை திசைதிருப்பி செல்போனை திருடி சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் சென்னிவனம் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அரியலூரில் உள்ள கடையில் சமையல் எண்ணெய் வாங்க வந்தார். எண்ணெய் வாங்கிக்கொண்டு அதற்கு பணம் கொடுக்க பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து கீழே வைத்துவிட்டு பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அவரது கவனத்தை திசைதிருப்பிய மர்மநபர் ஒருவர், அந்த செல்போன் மீது பையை வைத்து மூடினார். பின்னர் ராமகிருஷ்ணன் சென்றபிறகு செல்போனை எடுத்து கொண்டு மர்ம நபர் தப்பிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்