நொடியில் கண், வயிற்றை கிழித்து ரத்த வாந்தி எடுத்து கோர பலி.. பழைய பொருட்களை எரிப்பவர்களே உஷார்

x

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இரும்பு கழிவுகளை தீ வைத்து எரித்த போது திடீரென வெடித்ததில், பழைய இரும்பு கடை உரிமையாளர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்...

இதுகுறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் பிரபாகரனிடம் கேட்கலாம்...

இரும்பு கழிவுகளை தீ வைத்து எரித்ததால் விபரீதம் - சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பழைய இரும்பு கடை உரிமையாளர்

பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

வேலூர் காட்பாடி அடுத்த கல் புதூர் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வந்த விநாயகமூர்த்தி (45) என்பவர் இரும்பு கழிவுகள் மற்றும் கண்ணாடிகளை தீ வைத்து எரித்துள்ளார்.

தீயிலிருந்து திடீரென ஒரு பொருள் வெடித்து விநாயகமூர்த்தி கண்ணில் பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து காட்பாடி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்