"பல வாலிபர்களுடன் தவறான தொடர்பு"..நடுக்காட்டில் மகளுக்கு நடந்த பயங்கரம்..தந்தையின் பகீர் வாக்குமூலம்

x

முசிறி அருகே வனப்பகுதியில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் பெற்ற மகளையே கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தேவரப்பம்பட்டி வனப்பகுதியில் கடந்த 22-ந்தேதி சாலையின் முட்புதர் அருகே இளம்பெண் இறந்து கிடப்பதாக ஜெம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது சடலத்தின் அருகே அந்த பெண்ணின் துணிகள், ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் வைத்திருந்த பை கிடந்தது. விசாரணையில் அந்தப்பெண், முசிறி தாலுகா ஊரக்கரை கிராமத்தை சேர்ந்த அறிவழகன் மகள் பிரியங்கா என்பதும், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு மகாதேவி மலையப்பநகர் பகுதியை சேர்ந்த சீனுபிரசாத் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் பிரியங்காவின் தந்தை அறிவழகன் ஊரக்கரை விஏஓ முத்துச்செல்வன் முன்பு சரணடைந்தார். பின்னர் தா.பேட்டை போலீசார் அறிவழகனை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், பிரியங்கா தவறான பழக்க வழக்கத்துடன் வாலிபர்கள் பலருடன் பேசி பழகி வந்தார். உறவினர்கள், நண்பர்களிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். பிரியங்காவிற்கு ஒரு சகோதரனும், சகோதரியும் உள்ள நிலையில் அவர்களின் வாழ்க்கை பாழாகி விடுமோ என பயந்து மன உளைச்சலுக்கு ஆளானேன். இதனால் பிரியங்காவை கொல்ல முடிவு செய்து கடந்த 21-ம் வனப்பகுதிக்குள் இழுத்து சென்று கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஜெம்புநாதபுரம் போலீசார் அறிவழகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்