மொபைலுக்கு வரும் முக்கிய SMS - வெளியான எச்சரிக்கை

x

மின் கட்டணம் கட்டாததற்காக மின் இணைப்பு துண்டிக்கப்படவுள்ளது என, பொதுமக்களுக்கு மோசடியாக குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக, மின்சாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறான குறுஞ்செய்தி வந்தால் பதட்டம் அடைய வேண்டாம் எனவும், மின் கட்டணம் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என சரி பார்க்குமாறும், மின்சாரத்துறை கூறியுள்ளது. குறுஞ்செய்தி வந்த எண்ணை தொடர்புகொள்ளவோ, அதில் வரும் இணைய லிங்க்கை கிளிக் செய்யவோ வேண்டாம் எனவும், உடனடியாக ஆயிரத்து 930 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கவும், பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சைபர் கிரைம் குற்றங்களுக்கான இணையதளத்தில் புகாரளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்