எம்.பி.யாக நாளை பதவியேற்கிறார் இளையராஜா
எம்.பி.யாக நாளை பதவியேற்கிறார் இளையராஜா
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நாளை மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தா்மசாலா கோயில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பிக்களாக அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த திங்களன்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டோர் மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் அன்றைய தினம் இளையராஜா பதவியேற்காத நிலையில்,நாளை மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளார்.இதற்காக டெல்லி சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story