"தலைகணம் இல்லாமல் இருந்தால், வாழ்க்கையில் உச்சத்தை தொட முடியும்"- மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

x

எனக்கு எல்லாம் தெரியும் என்ற தலைகணம் இல்லாமல் இருந்தால், வாழ்க்கையில் உச்சத்தை தொட முடியும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில், 9 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியை தொடங்கி வைத்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நமக்கு எல்லாம் தெரியும் என தலைக்கணம் இருந்தால், வாழ்க்கையில் தோற்றுவிடுவோம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்