நேரில் ஆஜரான இடும்பாவனம் கார்த்திக்.. NIA அலுவலகத்தில் நடந்தது என்ன?

x

2 வருடங்களுக்கு முன் யூடியுப் பார்த்து இரு இளைஞர்கள் நாட்டு துப்பாக்கி தயாரித்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்திக் மற்றும் தென்னகம் விஷ்னு ஆகியோர் என்ஐஏ அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜராகினர். இது தொடர்பாக கடந்த 2 ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதன்படி, முதலில் சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன் ஆகியோர் ஆஜரானதை தொடர்ந்து, இன்று இடும்பாவனம் கார்த்திக் மற்றும் தென்னகம் விஷ்னு ஆகியோர் சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராகினர்.


Next Story

மேலும் செய்திகள்