"நான் கிண்டல், கேலி பேச வரல"...அதிகாரிகளை கடிந்துகொண்ட நிர்மலா சீதாராமன்

x

கள்ளபிரான் கோயிலின் பின்பகுதியை, ஏன்? சுத்தமாக வைக்கவில்லை என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்தார்.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமான் ஆய்வு செய்தார். அப்போது கள்ளபிரான் கோயிலுக்குள், மழைநீர் தேங்கி இருப்பதை பார்வையிட்டார். பின்னர், புரோகிதர்களிடமும், பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் கோயிலின் பின்புறம் அசுத்தமாக உள்ளதால், பெருமாளை ஊர்வலம் எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர். இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரிகளை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிந்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்