"எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. பூசாரிக்கு பின்னால் இருக்கும் சசிகலா" - பரபரப்பாக பேசிய ஜெ.தீபா

x

சென்னை போயஸ் தோட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு அருகே உள்ள விநாயகர் கோயிலின் பூசாரி ஹரிஹரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, போலீசாரிடம் புகாரளித்தார். இந்தநிலையில் தீபாவும் அவரது கணவரும், பூசாரி ஹரிஹரன் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். பின்னர் பேசிய தீபா, தங்கள் இடத்திலுள்ள கோயிலில், விநாயகர் சிலையின் வெள்ளி கவசத்தை ஹரிஹரன் கழட்டியதாகவும், அவரை தாங்கள் தடுக்க முயன்றதாகவும், ஹரிஹரன் புகாரில் கூறியிருப்பது போல் எதுவும் நடக்கவில்லை எனவும் தெரிவித்தார். இந்த சம்பவத்துக்கு பின்னால் சசிகலா இருப்பதாக குற்றஞ்சாட்டிய தீபா, தங்களுக்கு அவரால் ஆபத்து ஏற்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்