ஒரே மாதத்தில் இரட்டிப்பு பணம்...பல கோடி சுருட்டிய கேடி ஜோடி

x

செங்கல்பட்டு மாவட்டம் பட்டிபுலம் மீனவர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா - துளசி தம்பதியினர். இவர்கள் தீபாவளி சீட்டு நடத்தியதோடு, 1 லட்ச ரூபாய் கொடுத்தால் ஒரே மாதத்தில் 2 லட்ச ரூபாய் தருவதாகவும் கூறி, பணம் வசூலித்துள்ளனர். இதனை நம்பி அப்பகுதி பெண்கள் பல கோடி ரூபாயை, ராஜா - துளசி தம்பதியிடம் தந்துள்ளனர். குறிப்பாக நொச்சிகுப்பத்தை சேர்ந்த நித்யா என்பவர், தனது பணத்தை மட்டுமின்றி தனக்கு தெரிந்த 15 பேரிடம் பணம் வசூலித்து, 5 கோடி ரூபாயை தந்துள்ளார். இதன்பின்னர் அத்தம்பதியினர் பணத்தை தராமல் அலைக்கழித்துள்ளனர். இதனையடுத்து மோசடிக்கு ஆளானவர்கள் வீட்டை முற்றுகையிட, துளசியும் ராஜாவும் தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் புகாரளித்த நிலையில், தலைமறைவாக இருந்த ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவாக உள்ள துளசியை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்