"அம்மா..அம்மா.." கத்தி கதறிய பிள்ளைகள் - மனைவி முதுகில் கத்தியால் குத்திய கணவன்-நாமக்கல்லில் கொடூரம்

x

ராசிபுரத்தை அடுத்துள்ள கருமண்டபாளையத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கு காயத்ரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ராஜா வேலைக்கு செல்லாமல் இருக்கவே, கருத்து வேறுபாடு காரணமாக, கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தனது பிள்ளைகளை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வர காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ராஜா, சமாதானம் பேசிய நிலையில், மனைவி மற்றும் 2 குழந்தைகளை, தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திய ராஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காயத்ரியின் முதுகில் 6 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர் தனது 3 வயது மகனை மட்டும் அழைத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மகள் கூச்சலிடவே, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், காயத்ரியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த ராஜாவை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்