+2 இறுதித்தேர்வு - "சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய அதிரடி உத்தரவு"

x

கடந்தாண்டு +2 இறுதி தேர்வில் இரண்டு மாணவர்களின் விடைத்தாள் ஒரே மாதிரியாக இருந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சி பதிவுகளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி, தேர்வுகளில் முறைகேடுகள் ஈடுபடுவது மாணவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்க கூடியது என கருத்து தெரிவித்தார். சம்பந்தப்பட்ட தேர்வு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட இடங்களில் சிசிடிவி காட்சி பதிவுகளையும், இணை இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கு முடியும் வரை மாணவருக்கு எதிராக எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு விசாரணையை ஆக 25-க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்