3 பேரை கொடூரமாக கடித்த சில நிமிடத்தில் குதிரை ரத்தம் கக்கி பலி - கடலூரில் அதிர்ச்சி

x

கடலூரில் குதிரை கடித்து 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், பொதுமக்கள் துரத்தி சென்றதில் குதிரையும் உயிரிழந்தது.

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில், லோகேஷ்வரன் என்ற சிறுவனை அங்கிருந்த குதிரை கடித்து விரட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து ஊருக்குள் சென்று மேலும் 2 பெண்களை குதிரை கடித்துள்ளது. படுகாயம் அடைந்த 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து குதிரையை பிடிக்க பொதுமக்கள் துரத்தி சென்றபோது, அங்கிருந்த ஒரு பள்ளத்தில் குதிரை தடுமாறி விழுந்தது. குதிரையை மேலே இழுத்து கட்டிப்போட்ட நிலையில், சிறிது நேரத்தில் குதிரை உயிரிழந்தது. இதுதொடர்பாக குதிரையின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்