ஆட்டோவில் சிறிய பை... திறந்து பார்த்த டிரைவருக்கு ஷாக்..! காவல் நிலையத்தில் திடீர் டுவிஸ்ட்

x

சென்னை சூளைமேடு பகுதியில், ஆட்டோவில் தவறவிட்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகையை, உரியவரிடம் ஓட்டுநர் ஒப்படைத்தார். அசோக் நகரை சேர்ந்த ஆட்டோர் ஓட்டுநர் பார்த்திபன் என்பவர், தியாகராய நகரில் பெண் ஒருவரை ஏற்றிக்கொண்டு, சூளைமேடு வரை சவாரி சென்றார். பின்னர், ஆட்டோவில் சிறிய பை இருந்ததை அறிந்த பார்த்திபன், அதை திறந்து பார்த்த போது, நகை, தொலைபேசி எண் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட ஓட்டுநர், பையை தவறவிட்ட பெண்ணிடம் விவரங்களை தெரிவித்தார். தொடர்ந்து, சூளைமேடு காவல் நிலையத்தில், போலீசார் முன்னிலையில் அந்த பெண்ணிடம் நகையை ஒப்படைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்