முக்கோண ஓரினச்சேர்க்கை - +12 மாணவன் விட்டு சென்ற டைரியில் உடைந்த மர்மம்

x

சென்னீர்குப்பம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 12-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் மாணவரின் டைரியில் சூர்யா என்ற பெயர் றிப்பிடப்பட்டிருந்ததை தொடர்ந்து, அந்நபர் குறித்து விசாரணை செய்யப்பட்டது. அதன்பேரில், தலைமறைவாக இருந்த சூர்யாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட மாணவர், சூர்யா மற்றும் மற்றொரு 17 வயது சிறுவன் ஆகியோர் தற்பாலின ஈர்ப்பில் இருந்தது தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் சூர்யாவுடனான தற்பாலின ஈர்ப்பில் இருந்து மாணவர் விடுபட முயற்சித்த போது, மாணவரை சூர்யா மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சூர்யா மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்