இதயத்தில் ஓட்டை - கை வைக்காமலேயே கச்சிதமாய் சரி செய்த அரசு மருத்துவர்கள்..

x

12ம் வகுப்பு மாணவர், 10ம் வகுப்பு மாணவி, மற்றும் 4 வயது குழந்தைக்கு இதயத்தில் ஏற்பட்ட ஓட்டையை எவ்வித அறுவை சிகிச்சையுமின்றி ஆஞ்சியோகிராம் மூலம் அடைத்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்... தென் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனக்கூறி பொதுமக்கள் அச்சம் கொள்ளாமல், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் இலவசமாக இருதய சிகிச்சை பெற்று பயனடையலாம் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்