உயர் மின்னழுத்தம் காரணமாக விபத்து..4 பேர் மருத்துவமனையில் அனுமதி..சென்னையில் பரபரப்பு

x

சென்னை அருகே குரோம்பேட்டையில் உயர் மின்னழுத்தம் காரணமாக வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் கருகி ஏற்பட்ட விபத்தில் பச்சிளங் குழந்தை உள்பட 4 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தண்டுமாரியம்மன் கோயில் தெரு, துர்கா நகரில் உயர் மின்னழுத்தம் காரணமாக 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. ஒரு வீட்டில் வயர் தீப்பிடித்து எரிந்ததால், 4 மாத குழந்தை உள்பட 4 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயர் மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதமானது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்