புளியந்தோப்பில் பயங்கரம்.. விண்ணை முட்டிய கரும்புகை...

x

சென்னை புளியந்தோப்பு அருகே ஆடுதொட்டி வளாகத்தில் அமைந்துள்ள நவீன இறைச்சி கூட கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பயன்பாட்டில் இல்லாத கட்டடத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. பின்னர், தீ மளமளவென பரவ அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். இதையடுத்து, 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், கால்நடை உணவுகள், இயந்திரங்கள் முற்றிலும் சேதமடைந்த நிலையில், மாடு ஒன்று காயம் அடைந்தது. இந்த தீ விபத்தால், அப்பகுதி முழுவழும் புகை மண்டலமாக காணப்பட்டது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்