ஒரே இரவில் குன்னூரை புரட்டி போட்ட கனமழை... வீட்டுக்குள் மிதக்கும் பிரிட்ஜ்

x

குன்னூரில் பலத்த மழை காரணமாக எட்டிற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து சேதம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இரவில் பெய்த கன மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு அவ்வப்போது போக்கு வரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குன்னூர் முத்தாலம்மன் பேட்டை, வண்டிச்சோலை, பழைய மருத்துவமனை, எம்ஜிஆர் நகர், உமரிகாட்டேஜ் உட்பட சொகுசு பங்களா உட்பட பல வீட்டிற்குள் கழிவு நீர் கால்வாய், மற்றும் மழைநீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தும் சேதமானது. அம்மன் நகர் பகுதியில் வீட்டிற்குள் பாறை விழுந்ததால் வீடு சேத மடைந்து தற்போது மழைநீரை வெளியேற்றும் பணியில் 50 க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்