#JUSTIN || விடிய விடிய தலைநகரை மிரட்டிய கனமழை - 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

x

சென்னையில் விடிய விடிய மழை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை . குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இரவில் கனமழை. சென்னை வில்லிவாக்கத்தில் அதிகபட்சமாக 5 சென்டி மீட்டர் மழை பதிவு. செங்கல்பட்டு மாவட்டம் விஐடி-யில் 3.7 சென்டி மீட்டரும், மேற்கு தாம்பரத்தில் 3.1 சென்டி மீட்டரும் மழை பதிவு.

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை. 4 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.


Next Story

மேலும் செய்திகள்