கொதிக்கும் வெயில் - சென்னையில் பரிதாபமாக பறிபோன உயிர்

x

சென்னை மீஞ்சூர் பகுதியில் கட்டிட வேலை செய்து வந்த விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான கூலித்தொழிலாளி கடந்த மே 1ம் தேதி கட்டிட பணிக்கு இடையே மயங்கிய கால்கள் மரத்துப் போன நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதனை செய்ததில் வெப்ப அலை காரணமாக அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு நீர்ச்சத்து குறைபாட்டால் கணையம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட்டது தெரிய வந்த்து... படிப்படியாக அவர் நலம் பெற்று வரும் நிலையில் அவருடன் சேர்ந்து மீஞ்சூர் பைபாஸ் சாலையில் கட்டிடப் பணி செய்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த 25 வயதான சச்சின் என்ற தொழிலாளி வெப்ப அலை காரணமாக மயங்கிய நிலையில் நேற்று நள்ளிரவில் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்