முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா - தேவர் சிலைக்கு அபிஷேகம் செய்து ஆராதனை

x

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. முத்துராமலிங்கத் தேவரின் 61வது குருபூஜை மற்றும் 116வது ஜெயந்தி விழா வரும் 30ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீர் கொண்டு தேவர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டி குருபூஜை விழா தொடங்கியது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். இதனிடையே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்