வேட்டைக்காரனையே வேட்டையாட பார்த்த வெடி மருந்து - விழுப்புரத்தில் நேர்ந்த பயங்கரம்

x

மேல் மலையனூரைச் சேர்ந்த நரிக்குறவர்களான சிவகாசி, குட்டி ஆகியோர் வேட்டைக்கு சென்று விட்டு இன்று காலை மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மளிகைக் கடையில் பொருட்களை வாங்கியுள்ளனர். சைலன்சர் பக்கம் இருந்த வேட்டைக்காக வைத்திருந்த வெடி வெடித்துச் சிதறியதில் பைக் முற்றிலும் சேதம் அடைந்தது. மளிகைக் கடையில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன. சிவகாசிக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், கடையில் இருந்த மற்றொரு பெண்ணுக்கு ஒரு காது மட்டும் சரியாகக் கேட்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்