இளைஞரை பலி கொண்ட அரசு பேருந்துகள்.. 17 ஆண்டுக்கு பின் தேடி பிடித்து ஜப்தி

x

ஈரோடு மாவட்டம், கோபி அருகே 17 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்காத விவகாரத்தில், இரண்டு அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. விஜயகுமார் என்பவர் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து மோதி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்காத நிலையில், இரண்டு அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்