அரசின் பொங்கல் தொகுப்பு... நாமக்கல் விவசாயிகள் செய்த செயல்

x

நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், வீடுகள் முன்பு அரசின் பொங்கல் தொகுப்பை புறக்கணிப்பதாக நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது

மோகனூர் தாலுக்காவுக்குட்பட்ட வளையப்பட்டி, அரூர், பரளி, உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என கூறி, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, வளையப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில், அரசின் பொங்கல் தொகுப்பை புறக்கணிப்பதாக விவசாயிகள் நோட்டீஸ் ஓட்டியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்