தீபாவளிக்கு ஹவுஸ்புல்லான அரசு பஸ்கள்

x

தீபாவளிக்கு ஹவுஸ்புல்லான அரசு பஸ்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வதற்கான அரசு விரைவு பேருந்துகளில் விறுவிறுப்பாக முன் பதிவு நடைபெறுகிறது

வரும் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகள், 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றன.

இவற்றில் பயணம் செய்வதற்காக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை 70 விழுக்காடு இருக்கைகள் நிரப்பப்பட்டுள்ளன.

மேலும், கடைசி நேர நேரடி முன்பதிவு வரும் 20ஆம் தேதி பேருந்து நிலையங்களில் தொடங்கப்படவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்