புது ரோட்டில் நேர்ந்த கொடூரம் - பேரதிர்ச்சியில் மக்கள்

x

வடிவீஸ்வரம் பகுதியில் சாலை போடும் பணி நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் முன்பு சாலையில் கார் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த கார் யாருடையது என்பதை விசாரிக்காமல் காரு அருகிலேயே புதிதாக சாலை அமைத்து சென்றுள்ளனர். கார் நின்ற பகுதி பழைய சாலையுடன் காட்சி அளிக்கும் நிலையில் ஆதங்கம் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவசர கதியில் சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்