மாடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி...மயக்கமருந்து ஸ்பிரேவை அடித்து தங்கச் சங்கிலியை பறித்த பெண்

x

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். நெம்மேலி செல்லும் சாலையில், மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி ஒருவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த ஆண் மற்றும் பெண், விலாசம் கேட்டுள்ளனர். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்த பெண் மயக்கமருந்து ஸ்பிரேவை அடித்து மூதாட்டியிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். மூதாட்டி கூச்சலிட்ட‌தும், அப்பகுதியில் இருந்தவர்கள் கொள்ளையடித்த பெண்ணை பிடித்தனர். தப்பியோடிய நபரை செல்போன் சிக்னலை வைத்து கைது செய்து, தங்க சங்கிலி, மயக்க மருந்து ஸ்பிரேவை பறிமுதல்


Next Story

மேலும் செய்திகள்