வெள்ளை ஆடு-ஐ திருடும் கருப்பு ஆடுகள் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, இருசக்கரவாகனத்தில் சென்று மர்மநபர்கள் ஆடு திருடிய சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி வருகிறது. அரியாகவுண்டம்பட்டியில், கடந்த சில தினங்களுக்கு முன் ஆட்டு கொட்டகையில் புகுந்த மர்மநபர்கள் 2 பேர், ஆடுகளை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவரும் சூழலில், இதுபோன்று 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடுபோயுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்