காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பெண் குழந்தை பலி? - பெற்றோருக்கு ஏற்பட்ட சந்தேகம் - சென்னையில் பயங்கரம்

x

சென்னையில், காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், உடற்கூராய்வு செய்யக்கூடாது என, சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை ஓட்டேரியை சேர்ந்த 11வயது சிறுமிக்கு, கடந்த 21 தேதி திடீரென சிறுமிக்கு அதிகளவில் காய்ச்சல் இருந்ததால், பெற்றோர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுமி வெள்ளிக்கிழமையன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் பிறப்புறுப்பில் காயம் இருப்பதாகவும், உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறை இது குறித்து விசாரிக்க வேண்டும் என மருத்துவர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தான் சிறுமி உயிரிழந்துவிட்டதாகவும், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என சிறுமியின் உறவினர்கள் எழும்பூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் சிறுமி உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்