ஊராட்சி மன்ற தலைவரை சேரை கொண்டு தாக்கிய கும்பல் - அதிர்ச்சி வீடியோ காட்சிகள்

x

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வேலைக்கு ஆள் எடுப்பது தொடர்பாக நிகழ்ந்த பிரச்சனையில் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் நடந்துள்ளது.

பசும்பொன் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர் தனியார் சோலார் நிறுவனத்தில் செக்யூரிட்டி வேலைக்கு வைத்திருந்த பழைய நபர்களை நிறுத்தி விட்டு புதிதாக ஆட்களை நியமித்துள்ளார். இதனால் எழுந்த மோதலில் தாக்குதலுக்கு உள்ளானார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், கமுதி போலீசார் ஜெகன், சிவா, முனியசாமி, வில்வமூர்த்தி ஆகிய 4 பேர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்