கேம் விளையாட செல்போன் தராததால் 9ம் வகுப்பு மாணவி விபரீதம் - அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்

x

ஈரோடு மாவட்டம் நஞ்சை காளமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி என்பவரின் மகள் தர்ஷினி, அரசுப் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்தார். செல்போனில் கேம் விளையாடுவது தொடர்பாக தர்ஷினிக்கும், 3ம் வகுப்பு படிக்கும் அவரது சகோதரனுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் செல்போன் கேட்டு தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த தர்ஷினி, படுக்கையறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெற்றோரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள நிலையில், இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்