மணமகனை நெகிழ வைத்த நண்பர்கள் - மேடையில் கண்கலங்கிய மாப்பிள்ளை

x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மறைந்த தந்தையின் உருவ படத்தை திருமண பரிசாக கொடுத்து மணமகனை நண்பர்கள் நெகிழ்ச்சி அடைய வைத்தனர். உமையாள்பதி கிராமத்தை சேர்ந்த நாகராஜன் 15 ஆண்டு முன் உயிரிழந்த நிலையில், நாகராஜின் இளைய மகன் ராஜ்குமாருக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட ராஜ்குமாரை மகிழ வைக்கும் விதமாக, அவரது முழு உருவத்துடன் கூடிய பதாகையை நண்பர்கள் பரிசளித்தனர். இதனை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் உணர்ச்சி வசப்பட்டு கலங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்