துப்புரவு பணியாளர்களுக்கு தேநீர் இலவசம் - இதுதான் காரணமா?

x

சேலம் மாவட்டம் சங்ககிரியில், குழந்தைகள், துப்புரவு பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு இலவசமாக பால் மற்றும் தேநீர் வழங்கி வரும் தனியார் காஃபி பார் உரிமையாளரின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது. ஐயங்காட்டனூரில் செயல்பட்டு வரும் இந்த காபி பாரில் குழந்தைகள் உட்பட மூன்று பிரிவினருக்கும் இலவசமாக பால், காபி, தேநீர் வழங்கப்படும் என அக்கடையின் உரிமையாளர் தெரிவித்தார். மேலும், இம்மூவரும் கடவுளுக்கு நிகரானவர்கள் என அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்