திரைப்பட பாணியில் மோசடி..மொத்தமாக அபேஸ் செய்த இருவர்.."ரியல் லைப் காந்தி பாபு போல" | Tiruvannamalai

x

திருவண்ணாமலை மாவட்டம் அளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் காண்டிபன். இவர் நல்லவன் பாளையத்தை சேர்ந்த குணசேகரன் என்பவருடன், வந்தவாசி அருகேயுள்ள ஆரியத்தூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கிய நிலையில், சதுரங்க வேட்டை பட பாணியில் தங்களிடம் இரிடியத்தை கண்டு பிடிக்கும் இயந்திரம் இருப்பதாக கூறி விளம்பரம் செய்துள்ளனர். இதில், விழுப்புரம் மாவட்டம் நாப்பாளையத்தை சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் இருவரிடமும் இயந்திரம் கோரி 20 ஆயிரம் ரூபாய் பணத்தை முன்பணமாக கொடுத்திருக்கிறார். இறுதியில், அந்த இயந்திரம் ரைஸ் புல்லிங் மிஷின் என்பது தெரியவர, ஏமாந்துபோன சங்கர் கணேஷ் போலீசில் புகாரளித்துள்ளார். புகார் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, இருவரும் சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடிக்கு முயன்றது தெரியவர, காண்டிபன் மற்றும் குணசேகரன் ஆகிய இருவரையும் செய்தனர். அவர்களிடம் இருந்து ரைஸ் புல்லிங் மிஷின் மற்றும் இருபதாயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்