OneWay-ல் வந்த வனத்துறை ஊழியர் - பெண் மீது மோதி பயங்கர விபத்து

x

சேலத்தில், ஒரு வழிப்பாதையில் இருசக்கர வாகனத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய வனத்துறை ஊழியர், போலீசார் தன்னை தாக்கியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருவழிப்பாதையில் வந்த வனத்துறை ஊழியர் சரவணன், பெண் ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விபத்து குறித்து விசாரிக்க முற்பட்டபோது, சரவணன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சரவணனின் வாகனத்தை ஓரம் கட்டுவதற்காக காவலர் ஒருவர் எடுத்தபோது, அவர் தன்னை தாக்கியதாக கூறி வாக்குவாதம் செய்தார். பின்னர் விசாரணை நடத்திய போலீசார், சரவணனை எச்சரித்து அனுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்