ஏஜெண்டுகளை நம்பி வெளிநாட்டு வேலை... ரூமுக்குள் அடைத்து.. சாப்பாடு கொடுக்காமல் மிரட்டிய கொடூரம் - மாடியிலிருந்து குதித்த பெண்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த மாரி, குடும்பச்சூழலால் வெளிநாடு செல்ல முடிவெடுத்து ஏஜெண்ட் ஒருவரை நம்பி கத்தாருக்கு சென்றுள்ளார். கடந்த ஜூன் 11-ல் கத்தாருக்கு சென்ற மாரியை தொடர்ந்து வீட்டு வேலைக்கு செல்ல வற்புறுத்தப்பட்ட நிலையில், கடுமையான வேலை பளு காரணமாக அவர் பணிக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், 4 லட்ச ரூபாய் கொடுத்தால் இந்தியாவிற்கு அனுப்பவதாக கூறி மிரட்டிய ஏஜெண்டுகள், மாரியை அறையில் அடைத்து வைத்ததை அடுத்து, மாடியிலிருந்து குதித்து அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்தபடி அவரளித்த தகவலின்பேரில் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் தூதரகத்தின் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்கு பின் மாரி இந்தியா அழைத்து வரப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்