அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு குட்டு வைத்த ஐகோர்ட் கிளை

x

அரசு பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியரை கிராம சுகாதார செவிலியராக நியமிக்க கோரிய வழக்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தெய்வானை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அங்கன்வாடி ஊழியர்களை பணி உயர்வு செய்து முறையாக பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர்களை கிராம சுகாதார செவிலியர் பணியில் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் தனபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.




Next Story

மேலும் செய்திகள்