நீண்டு கொண்டே செல்லும் வரிசை.. நிவாரண டோக்கன் வாங்க குவிந்த கூட்டம்

x

அரசு அறிவித்துள்ள நிவாரணத்தை பெறுவதற்கான டோக்கனை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை சென்னை முழுதும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி இருந்தது

இந்நிலையில் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருந்தது

இதனை அடுத்து எவ்வாறு டோக்கன்களை விநியோகம் செய்ய வேண்டும் என்று நியாய விலை கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு

நேற்று முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றன

மேலும் மேலும் நாளையும் சென்னையில் ரேஷன் கடைகளை இயங்கும் என்று அரசு அறிவித்து இருந்த நிலையில்

சென்னை ஈஞ்சம்பாக்கம் அடுத்த பெத்தல் நகர் பகுதியில் நீண்ட வரிசையில் பாதிக்கப்பட்ட மக்கள் காத்திருந்து டோக்கன்கள் வாங்கிச் சென்று கொண்டிருக்கிறது

மேலும் நிவாரண டோக்கன்களில் கடை என் மற்றும் கடை அமைவிடம் உள்ளிட்டவை குறிப்பிட்டு டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன

இப்பகுதியில் டோக்கன் பெறுவர்கள் அனைவரும் நாளை நியாய விலை கடையில் நிவாரண தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்