மழையால் பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளம்.. கயிறுக்கட்டி கரையை கடக்கும் மக்கள்

x

மதுரை பாலமேடு அருகே காட்டாற்று வெள்ளத்தை பொதுமக்கள் கயிறுகட்டி ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். பாலமேடு அருகே தெத்தூர் ஊராட்சி கெங்கமுத்தூர் பகுதியில், சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அன்றாடம் தேவையான பொருட்களை வாங்கவும், மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்லவும், சாத்தையார் அணை ஓடையை கடந்து செல்கின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் சிறுமலை பகுதியில் மழை பெய்து, அங்கிருந்து பாலமேடு சாத்தையார் அணைக்கு வந்து நீர் சேகரிக்கப்படுகிறது. காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஒடுவதால் அப்பகுதி மக்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க கயிறு கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்