திருடல.. பொய் சொல்லல.. கதறி அழும் குடும்ப உறவுகள்..தமிழக மீனவர்கள் கதி என்ன?

x

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி விசைப்படகையும் 15 மீனவர்களையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட புதுச்சேரி, தமிழக மீனவர்களின் 3 படகுகள் மற்றும் 22 மீனவர்களை இலங்கை காங்கேசன் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். மீனவர்கள் கைதால் கிளிஞ்சல் மேடு கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்