படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு - திடீரென போராட்டத்தில் குதித்த உறவினர்கள்

x

மீனவ சமுதாயத்தினரின் வாக்குகள் கிடைக்காது என்ற அச்சத்தால், மீனவ மாநாட்டையடுத்தே இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கியதாக, விஷமம் பரப்பப்படுகிறது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நாகை மீனவர்களை சந்தித்து, அமைச்சர் ரகுபதி ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது எனவும், கடலோர காவல்படை அக்கறையோடு செயல்பட வேண்டும் என்பதற்கு, இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு எனவும் கூறினார். மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்