ஓசூரை உலுக்கிய பட்டாசு விபத்து ..19 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்

x

ஓசூர் அடுத்த அத்திப்பள்ளி அருகே, நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் கடந்த 7 ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில், சுமார் 16 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், பட்டாசு கடை உரிமையாளர் உட்பட 5 பேர் படுகாயத்துடன் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட திருபத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ள வெள்ளை குட்டை கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் ராஜேஷ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் 4 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்