போதை மாத்திரைகள் விற்பதில் தகராறு.. கத்தியுடன் சுற்றித்திரிந்த சிறுவர்கள் - அதிரடி காட்டிய போலீசார்

x

சென்னையில், போதை மாத்திரைகள் விற்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இரண்டு சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில், போதை மாத்திரைகள் விற்பனை குறித்த தகவலின்பேரில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். கத்தியுடன் சுற்றித்திரிந்த அருண் என்பவரை பிடித்து விசாரித்தனர். ரங்கநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனையில் தகராறு ஏற்பட்டு சிலரை தாக்கியதாக கூறியுள்ளார். இதையடுத்து, அருண், தானேஷ், மகேஷ், ஆதி மற்றும் இரண்டு சிறுவர்களை கைது செய்தனர். 2 சிறார்களையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்த போலீசார், மற்ற 4 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்