சென்னை விமான நிலையத்தில் வாயை பிளக்க வைத்த பெண் வீராங்கனைகள்.. அனல் பறக்க வேற லெவல் சாகசம்

x

சென்னை விமான நிலையத்தில் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் சாகச அணிவகுப்பு நடைபெற்றது. இதில் முதல் முறையாக சிஐஎஸ்எப் வீரர்களுடன் இணைந்து வீராங்கனைகள் சாகசத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பேசிய மத்திய தொழில் பாதுகாப்பு போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதற்கு ஏற்றார் போல் வீரர்கள் மற்றும் அதிநவீன கருவிகளும் அதிகரிக்கப்பட்டு பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், பயணிகளின் வசதிக்காக தமிழ் மொழியை வீரர்களுக்கு கற்றுக் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்