Toxic லவ்வரிடம் சிக்கிய பெண் வழக்கறிஞர்.. சென்னையில் பகீர் சம்பவம்

x

நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடப் போவதாகக் கூறி மிரட்டி வந்த முன்னாள் காதலன் மீது, பெண் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் பெண் ஒருவர், கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஜெய்கணேஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால், இளம்பெண் அவரை விட்டு பிரிந்துள்ளார். இதனிடையே, இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி, ஜெய்கணேஷ் இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதுடன், பாலியல் இச்சைக்கும் இணங்க மிரட்டியதாக சொல்லப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்