பரிதாபமாக உயிரிழந்த தந்தை மகள்

x

முசிறி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை, மகள் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சேர்ந்த வடிவேலு என்பவர், தனது அண்ணன் மகன் திருமணத்தில் கலந்து கொள்வதற்கு தனது குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டுச் சென்றார். முசிறி- துறையூர் சாலையில், ஜெம்புநாதபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த கார் மீது, இவர்களின் கார் நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் வடிவேலு, அவருடைய மகள் ஹர்னிதா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். வடிவேலுவின் மனைவி, மகன் மற்றும் எதிரில் வந்த காரில் இருந்த மூன்று பேரும் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்