தாய்ப்பால் தானமாக கொடுத்து பிரபலமான பெண் - கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடி தானம்

x

கோவை மாவட்டம், சூலூரை சேர்ந்த பெண் தாய்ப்பால் தானம் கொடுத்து பிரபலமான நிலையில் தற்போது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலை முடியை தானமாக கொடுத்துள்ளார்.

கணியூர் பகுதியை சேர்ந்த பேராசிரியர் மகேஸ்வரன் என்பவது மனைவி சிந்து மோனிகா. இவர்

அமிர்தம் தாய்ப்பால் தானம் என்ற அமைப்பு மூலம் கடந்த ஆண்டு பத்து மாதங்களாக 55 லிட்டர் தாய்ப்பாலை சேகரித்து கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளார். இவரின் முயற்சி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில்,

புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகளின் நிலையை அறிந்து தனியார் அமைப்பு மூலம் தனது தலை முடியை முழுவதுமாக தானமாக வழங்கி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்