குடிபோதையில் போலீசில் சிக்கிய பிரபல தமிழ் டைரக்டர்

x

குடிபோதையில் போலீசில் சிக்கிய பிரபல தமிழ் டைரக்டர்

சென்னையில் மதுபோதையில் கார் ஓட்டியதாக, திரைப்பட இயக்குநர் கல்யாண் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய தமிழ் படங்களை இயக்கியவர் கல்யாண்.

இவர், ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் காரில் சென்ற போது, போக்குவரத்து போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.

அதில், இயக்குநர் கல்யாண் மதுபோதையில் காரை இயக்கியது தெரியவந்தது.

இதனிடையே, காரை பறிமுதல் செய்த போலீசார், தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், கல்யாண் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்